Saturday, 27 June 2020

பங்கார்க்ட் கோட்டை

அமானுஷ்ய அனுபவம்: 14

பங்கார்க்ட் கோட்டை:

ராஜஸ்தான் மாநிலம் ஹல்வார் மாவட்டத்தில் உள்ளது இக்கோட்டை. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் இக்கோட்டை உள்ளதால் இயல்பாகவே இங்கு சூரிய ஒளி குறைவாகவே வருகிறது. ஆகவே பகலிலும் இங்கு இருள் சூழ்ந்துவிடுகிறது. அக்பரின் அமைச்சர் மன் சிங்கின் சகோதரர் மாதோசிங் என்பவரால் 17ம் நூற்றாண்டில் இக்கோட்டை கட்டப்பட்டது. 

சூரியன் மறைய ஆரம்பித்ததும், இக்கோட்டைக்கு எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. சுற்றுலாப்பயணிகளை மாலை4 மணிக்குமேல் அரசாங்கமே அனுமதிப்பதில்லை, அதற்குமேல் எவரும் இங்கு தங்ககூடாதென அரசே அறிவுறுத்துகிறது! காரணம் அந்த கோட்டைக்குள் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் பங்கார்த் கோட்டைக்குள் யாரோ நடனமாடுவது போன்றும் கத்துவது போன்றும் சத்தங்கள் வருவதாக அந்த பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இரவு நேரங்களில் அந்த கோட்டைக்குள் சென்ற பலர் இதுவரை வெளிவரவில்லை எனவேஅது குறித்த புகார்கள் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இப்படி பல புகார்கள் வந்ததை அடுத்து, பிரச்சனைகளை தவிர்க்கவே, இரவு நேரங்களில் அந்த கோட்டைக்குள் மக்கள் யாரும் செல்லக்கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எச்சரிக்கை பலகையும் கோட்டை முகப்பில் மாட்டியுள்ளனர்.

ஒரு சூனியக்காரனாலே இக்கோட்டை பேய்க்கோட்டையாய் மாறியதாய் கூறுகின்றனர். இக்கோட்டையின் இளவரசியின் அழகில் மயங்கி அவளை மணக்க விரும்பிய மந்திரவாதி, சதி செய்து, இளவரசியை அடைய எண்ணும் வேளையில் ஒருவிபத்தில் இறக்க, சபித்து விட்டு இறக்கிறான். ஆகவே அங்கு நடந்த போரில் கோட்டை நாசம் செய்யப்படுகிறது. இளவரசியும் கொல்லப்படுகிறாள். அதன்பின் அங்கு மக்கள் குடியேற்றம் இல்லாது, அன்று முதல் கவனிப்பாரின்றி அமானுஷ்ய சக்திகள் சூழ்வதாய் அருகேயுள்ள குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். வரலாறு ரீதியாய் ராஜபுத்திரரும், முஸ்லீம்களும் அடிக்கடி போரிட்டுள்ளனர். அதைபோல் அக்பர் காலத்திற்கு பின் நடைபெற்ற போரில் நிறைய ராஜபுத்திரர் இக்கோட்டையில் வெட்டி வீழ்த்தப்பட்டு சடலங்களை கூட அப்புறப்படுத்த இயலாது அவசரகதியில் இக்கோட்டையை காலிசெய்து கிளம்பியிருக்க வேண்டும். அதைபோல் புறக்கணிக்கப்பட்ட இந்நகரில் கிடந்த பிணங்களின் கணக்கற்ற எழும்புக்கூடுகளை கண்டு பின்னால் வந்த மக்களும் இக்கோட்டையை புறக்கணித்துவிட்டனர். 

மாலை நான்கு மணிக்குள் இவ்வூர் அடங்கி விடுகிறது. அதனால் சுற்றுலாப்பயணிகளும் வருவதில்லை. அதையும் மீறி இங்கேவரும் பயணிகளை உள்ளூர் வாசிகள் கண்டுகொள்ளாது விட்டுவிடுகின்றனர். நிறைய சுற்றுலாவாசிகள் வீம்பிற்கு பாதிதூரம் சென்று பயம் காரணமாய் தெறித்து ஓடிய சம்பவங்களும் உண்டு. இக்கோட்டையின் பல வாயிற்களை இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. கண்டுபிடிக்கப்படாத விஷயங்கள் பல இக்கோட்டைகள் உள்ளன. பல பாதாள அறைகள் தூர்ந்துபோய் அடைபட்டு கிடக்கிறது. இயல்பாகவே இருண்ட இவ்வறைகளை மேற்கொண்டுபோய் பார்க்க தைரியம் இல்லாததால் பல அமானுஷ்யங்கள் இக்கோட்டைக்குள் மறைந்து கிடக்கிறது.






No comments:

Post a Comment

காளிதேவி தரிசனம்

அமானுஷ்ய அனுபவம்-16 காளிதேவி தரிசனம் : Disclaimer : இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் தான், எனக்கும் இதுல அனுபவம்லா இல்லை, பிருங...