Dear David :
ஆடம் எலைஸ் எனும் அமெரிக்கர் ஓர் இணைய விரும்பி, தனது அன்றாட நிகழ்வுகளை தினமும் சமூகவலைத்தளமான டிவிட்டரில் பதிவேற்றுவார். ஒருமுறை டிவிட்டரில் இன்று ஒரு அமானுஷ்யத்தை உணர்ந்தேன் என பதிவிட்டார், அவரது Followers என்னவென கமெண்ட் செய்ய, தொடர்ந்து மூன்று நாட்களாய் ஒரு சிறுவன் கனவில், தோன்றுகிறான் என பதிலுறைத்தார். பொதுவாக அனைவரின் கனவும் வெவ்வேறு இடங்களிலேயே பெரும்பாலும் தோன்றும், ஆனால் தனது கனவோ தனது படுக்கையறையிலேயே தோன்றுகிறது, அதுவும் எனது அறையிலுள்ள பச்சை நிற நாற்காலியில் அவன் அமர்ந்து எனை பார்க்கிறான் என ட்வீட் செய்தார். அவரது இந்த ட்வீட்டை பெரும்பாலானோர் கிண்டல் செய்து திட்டி பதிவிட்டனர். ஒருசிலர் ஆடமை மதித்து அந்த சிறுவனின் உருவம் எப்படி இருந்தது என கேட்டிருந்தனர். ஆடமும் யோசித்து தன் கனவில் வந்த தலைசிதைந்த அவ்வுருவத்தை வரைந்து ட்வீட் செய்தார். இக்கனவு தினமும் தொடர்ந்தது. தினமும் கனவில் அந்த சிறுவனும், ஆடமும் நேருக்குநேர் பார்த்தவாறு இருந்தனர். ஒருநாள் அச்சிறுவன் நாற்காலியை விட்டு எழுந்து ஆடம்மை நோக்கி அருகே கிட்டே வர, பதறியடித்து எழுந்தார் ஆடம். அதன்பின் மறுநாள் புதிதாக நூலகத்தில் இருக்குமாறு ஒரு கனவு வந்தது! அங்கே ஒரு பெண் ஆடம்மை நோக்கி வந்து, நீங்கள் தானே டேவிட்டை கண்டீர்கள்? என வினவ, தான் எந்த டேவிட்டையும் காணவில்லை என்றார். அதற்கு அப்பெண் அச்சிறுவன் பெயர்தான் டேவிட் என்றாள். மேலும் அவள் ஆடமிடம், முக்கியமாய் அந்த மூன்று கேள்விகளை மட்டும் டேவாட்டிடம் கேட்டு விடாதீர்கள், என கூறி மறைந்தாள்.
இப்போது அச்சிறுவனின் பெயர் டேவிட் என தெரிந்து. இதையும் ட்வீட் செய்து, மறுநாள் கனவுக்காக காத்திருந்தார். இரண்டு நாள் வேறு ஏதோ கனவு வர, மூன்றாம் நாள் அதே நாற்காலியில் அச்சிறுவன் அமர்ந்திருந்தான். அப்போது அச்சிறுவன் ஆடம்மை பார்க்க! ஆடம்,
"டியர் டேவிட் உன் தலையில் ஏன் இந்த காயம்? என கேட்க, முகத்தை எங்கோ திருப்பி சூப்பர் மார்க்கெட்டில் விபத்து நடந்தாய் கூறினான் டேவிட்.
"சூப்பர் மார்க்கெட்டில் எங்கே விபத்து நடந்தது?" என கேட்க,
மீண்டும் முகத்தை எங்கோ திருப்பி, அங்கே ஒரு செல்ஃபில் விபத்து நடந்தது என கூறினான் டேவிட்.
அடுத்ததாய் எவரேனும் உன்னை தலையில் தள்ளி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது தற்செயலா என கேட்டார் ஆடம்.
முகத்தை ஆடம்க்கு நேராய் திருப்பி நாற்காலியை விட்டு இறங்கி கோபத்துடன் வந்தான் டேவிட். பதறியடித்து எழுந்தார் ஆடம், அப்போதுதான் முந்தைய கனவில் ஒரு பெண், டேவிட்டிடம் அந்த மூன்று கேள்வியை கேட்காதே என கூறியது நினைவில் வந்தது! அதன்பிறகு சிலநாள் டேவிட் வரவில்லை கனவில். ஆனால் அதன்பிறகு டேவிட்டை தேட ஆரம்பித்தார் ஆடம். செய்திதாள்களை சேகரித்து பார்த்தார், டேவிட் என்ற சிறுவன் சூப்பர்மார்க்கெட் விபத்தில் இறந்தானா! என தேடினார். ஆனால் அப்படியொன்றும் செய்தி கிட்டவில்லை. இது வெறும் கனவுதான் என நிம்மதியடைந்தார். அப்போதுதான் ஒன்றை கவனித்தார், அவரது வீட்டிலிருந்த இரு பூனைகள் தினமும் இரவு வீட்டின் கதவு அருகே மோப்பம் பிடித்தவாறு நின்று எதையோ பார்த்துகொண்டிருப்பதை கவனித்தார். தொடர்ந்து ஆறாவது நாளாய் நள்ளிரவில் இச்சம்பவம் நடந்தது. அப்போது கேமராவிலும், மொபைலிலும் அக்காட்சியை பதிவு செய்தார். அப்போது கேமராவில் எடுத்த புகைப்படத்தில் அக்கதவுக்கு பின்னாளிருந்த இடம் கருப்பாகவும், மொபைலில் எடுத்தது சாதாரணமாகவும் இருந்தது. இதனையும் அவர் ட்வீட் செய்தார். அவருடைய Followers அந்த இருண்ட காட்சியை Bright செய்து பார்த்ததில் அதில் ஒரு உருவத்தின் பார்டர் தெரிவதாய் கமெண்ட் செய்தைதிருந்தனர். ஆடமும் அதனை பார்த்து அதிர்ந்தார். மறுநாள் அதை யோசித்துகொண்டே உறங்கிபோனார். அன்றைய கனவில் டேவிட் அவரை கையை பிடித்து இழுத்து எங்கோ சென்றான்.மறுநாள் குளிக்க செல்கையில் தன்கையை அப்போதுதான் கவனித்தார், கைமணிக்கட்டில் இரத்தம் உறைந்த சுவடு தெரிந்தது. அருகே பார்த்ததில் ஒருவன் கையை பிடித்தால் பதியும் அச்சு மாதிரி இருந்தது. அன்று இரவு டேவிட் வந்தான் அவனிடம் பேச முற்படுகையில் அவன் உடனே சேரைவிட்டு எகிறி ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே சென்றான். இது அவருக்கு கனவு போல் தோன்றாமல் உண்மையாய் நடப்பதாய் தோன்ற உடனே எழுந்தார் ஆடம். அங்கே கண்ணாடி உடைந்திருந்தது.அது பனிகாலமாததால் அச்சிறுவனின் பாத அச்சு தெளிவாக தெரிந்தது. அதனை தொடர்ந்து சென்று பார்த்தார். ஒருகட்டத்தில் அது நின்றது. அதன்பின் குழப்பம் கலந்த பயத்துடன் வீடு திரும்பினார்.
அன்று இரவு ஒரு வீடியோ கேமிரா தன் அறையில் செட் செய்து படுத்தார். அக்கேமரா நொடிக்குநொடி நிகழ்வினை காட்சிபடுத்தியது. காலையில் பார்த்த ஆடம் பயத்தில் உறைந்தார், காரணம் ஒரு சிறுவனின் உருவம் படுக்கையை சுற்றி சுற்றி வந்தது. ஆடமின் அருகே ஏதோ செய்கை செய்தவாறு விடியும் வரை இருந்ததை அக்கேமரா காட்சிபடுத்தியது. இதற்குமேல் அங்கு இருக்க தைரியமில்லாது அவ்வீட்டை காலிசெய்து கிளம்பினார்.
இதனையும் ட்வீட் செய்து பரபரப்பாக்கினார் ஆடம். இது ஒரு ஹாலிவுட் படமாக கூட வந்தது.



No comments:
Post a Comment