ஈமவிளக்கின் பேஎய் மகளிரொரு
அஞ்சு வந்தன்று அம்மஞ்சுபடு முது காடு''
(புறநா. 356)
(பிணம் எரியும் சுடுகாட்டிலும் பேய்ப் பெண்டிர் இருந்ததாக நம்பினார்கள்.)
பேய்கள் குறித்து சங்கஇலக்கியம் முதல் காஞ்சனா 3 வரை நிறைய குறிப்புகள் உண்டு. நேரடியாக சான்றுகள் இல்லாவிடினும், அனைவரும் பயப்படும் ஒரு விஷயம் பேய். இலக்கியம் தவிர்த்து கல்வெட்டிலும் கூட பேய்குறித்த குறிப்பு உண்டு. திருக்கோளக்குடி கருவறை நிலவறையில் ஒரு கல்வெட்டு 'மூவேந்தன்' எனும் பைசாசம் பற்றி கூறுகிறது. பேயை அனுபவப்பூர்வமாய் உணர்ந்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் அனுபவங்களை
கொஞ்சம் பார்ப்போம்:
ஜீலியஸ் சீசரை கொன்ற புருட்டோஸ், மார்க் ஆன்டனியின் படையோடு மோத ஓரிடத்தில் தங்கியிருந்தார் அப்போது சீசரின் ஆவி, புருட்டஸின் கட்டிலின் அருகே நின்று மிரட்டியதாய் வரலாற்று ஆசிரியர் ப்ளூடார்க் கூறுகிறார்.
இனி அமானுஷ்யத்தை அனுபவித்த மனிதர்கள் மற்றும் பேய், ஆவியை உணர்ந்த மனிதர்களின் அனுபவங்களை தினமும் காண்போம்.
லண்டனில் 1882 ல் பிறந்தவர் கென்னத் வாக்கர் பிரபல மருத்துவமேதை, இன்றைய அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு முன்னோடியாய் திகழ்பவர். பல புத்தகங்களை எழுதினாலும் தனது அனுபவத்தை The unconscious mind எனும் நூலில் எழுதியுள்ளார்.
கென்னத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் ரோவல் பொறுப்பான மனிதர் பொய்பேசும் வழக்கம் இல்லாதவர், அவர் விவரித்த சம்பவம் இது:
மதியம் 12 மணி
ஆஸ்பத்திரியில்(செயின்ட் ஃபிரையாஸ்)ரவுண்ட்ஸ் முடித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். ஆஸ்பத்திரிக்கும் மெடிக்கல் காலேஜிற்கும் இடையே ஒருபாலம் உண்டு, அதில் நடந்து வந்தேன் எனதெதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆஸ்பத்திரி யூனிபாஃர்ம் அணிந்த நர்ஸ் வந்தார். அவரை இதற்குமுன் பார்த்ததில்லை. அந்த யூனிபாஃர்ம் கொஞ்சம் கண்ணை உறுத்தியது, காரணம் அது ஆஸ்பத்திரியின் பழைய மாடல் துணி. அதனை யாரும் தற்போது அணிவதில்லை, நான் அருகில் செல்ல சற்று விலகினார், மரியாதை நிமித்தமாய் என் தொப்பியை விலக்கி காட்டினேன். அவரும் மெல்ல தலையசைத்து என்னை தாண்டி சென்றார். சரேலென திரும்பி பார்க்கையில் அவர் அங்கு இல்லை. இருபுறமும் தோட்டம் எனவே அவர் அங்கே செல்லவும் வாய்ப்பு இல்லை. அவர் மறைந்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். எனக்கு பயமில்லை ஆச்சர்யமே மேலோங்கியது. உடனே ஆஸ்பத்திரி முழுக்க அலைந்தேன் தென்படவில்லை அவர். சீனியர் நர்ஸ் அறைக்கு சென்று நீளமான மூக்கோடு 50 வயது செவிலியரை பார்த்தீர்களா? என கூறியதும் அங்கு இறுக்கமான சூழல் நிகழ்ந்தது. தலைமை டாக்டர் மேர்ட்டன் 8ம் வார்டு நர்ஸை பார்த்தீர்களா? என வினவினார்.
மேலும் ஐந்தாறு நர்ஸ்கள் "அதை" பார்த்தது தெரிந்தது. அனைவரும் நான் கண்ட உருவத்தை அப்படியே கூறினார்கள்.
8 ம் நம்பர் வார்டுக்கு பணிசெல்ல அனைவரும் பயப்படுகின்றனர். பகலிரவு என்றில்லை, கூட்டமில்லா நேரத்திலும் திடீரென எதிரே அது தென்படுகிறது! ஆகவே அந்த வார்டுக்கு யாருமே போவதில்லை என்றனர். நிறைய சீனியர் மருத்துவர்களும் பார்த்துள்ளனர்.அவர்களுள் ரிட்டயர்ட் மருத்துவர் டாக்டர் ஃபிராங்கை நான் காண சென்றேன். ஏனெனில் அவரும் பார்த்துள்ளாராம். இந்த நர்சுகள் பொய் சொல்ல வாய்ப்புள்ளது! எனவே அவரைத் தேடி சென்றேன். அந்த நர்சின் கண்ணில் கலவரம் இருந்ததாகவும் தன்னைத் தாண்டிச் செல்கையில் பளிச் என மறைந்ததாகவும் கூறினார். மேலும் விசாரித்ததில் அந்த நர்சிற்கும் மேலதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட, சென்சிட்டிவான அந்த நர்ஸ் ஆஸ்பத்திரியின் நான்காவது மாடியிலிருந்து குதித்து இறந்ததாக ப்ராங்க் கூறியுள்ளதை குறிப்பிடுகிறார்.
(இக்கதை படித்துக்கொண்டிருக்கும்போது கரண்ட் கட் ஆகி நர்சு பின்னாடி நிக்கிறது மாதிரி Feel ஆகி ஒரே அசிங்கமாயிருச்சி குமாரு!)
அடுத்த கதை அடுத்த பதிவில் பார்ப்போம்.



No comments:
Post a Comment