Saturday, 27 June 2020

மோய் _ஈஸ்டர் தீ

அமானுஷ்ய அனுபவம்-07

ஈஸ்டர்தீவு மர்மங்கள்:

முன்னொரு காலத்தில் இந்த தீவு முழுவதும் எரிமலையாக இருந்தது. 
பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்த தீவினுள் பல மர்மங்கள் புதைந்துள்ளது. ஐரோப்பியர்கள் ஒரு ஈஸ்டர் திருநாளன்று கண்டறிந்ததால் அதுவரை பெயரிடப்படாத அந்த தீவிற்கு "ஈஸ்டர் தீவு" என பெயரிட்டனர்.இந்த தீவின் கடற்கரையில் சுமார் ஆயிரக்கணக்கில் ராட்சத மனிதமுகஉருவங்கள் ஆங்காங்கேநடப்பட்டுள்ளது. அவைகளின் முகங்கள் சாதாரண மனித முகத்தின் வழக்கத்திற்கு மாறாக  நன்கு நீண்டதாக செதுக்க பட்டு உறுதியான கூர்மையான மூக்கு தடித்த உதடுகள் மற்றும் அடர்த்தியான புருவங்கள் கொண்டிருந்தனஒவ்வொரு சிலையும் சராசரியாக 14-20 டன் எடையுள்ளது. அந்த மக்கள் இச்சிலைகளை "மோய்" என அழைக்கின்றனர். அங்கே இருப்பதிலேயே உயரமான மோய் "பாரோ" என்று அழைக்க படும் மோய் ஆகும். அது 33 அடி உயரமும் 90 டன் எடையும் கொண்டது. இருப்பதிலேயே அதிக எடை கொண்ட மோய் உயரம் குறைந்து அகலம் பெருகி 86 டன் எடையுடன் காண படுகிறது. இன்னோரு பிரமாண்ட மோய் செதுக்கப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ளது அது செதுக்க பட்டு இருந்தால் 69 அடியும் 270 டன் எடையும் கொண்டதாக இருந்திருக்கும், கிபி 1200 இலிருந்து கிபி 1600 ற்கு இடைப்பட்ட காலத்திற்குள் இச்சிலைகள் வடிவமைக்கபட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

 இங்குள்ள பழங்குடியினர் "ராப்பனூய்" என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் கிடையாது. பாலினீஸியன்கள். இவர்களது
மூலக்கூறு DNA ஒப்பீட்டின் படி பாலினீஸியன்களோடு இவர்களது DNA ஒத்துப்போகிறது.
இவர்கள் சுமார் 400 A.D வாக்கில் இங்கு குடியேறி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.வழக்கம்போல இந்த சிலைகளையும் ஏலியன்ஸ்தான் கட்டினார்கள் என கதைகட்டி விட்டிருந்தனர். 1980 களில் ஆராய்ச்சியாளர்கள் இவ்வளவு எடையை நகர்த்திக் கொண்டுவருவது சாத்தியமில்லை என கருத்தினை முதலில் தெரிவித்தனர். இவ்வளவு நவீன உபகரணங்கள் இருக்கும் இக்காலத்திலேயே இது சாத்தியமில்லை அன்று எவ்வாறு நகர்த்தியிருப்பர்?  என்ற கேள்வி அவர்களை குடைந்தது. ஒருவாறு ஒரு விடையை கண்டறிந்தனர். 

பேராசிரியர்கள் சர்ஜிகா ராபு மற்றும் டெரிகண்ட் இந்த தீவையே சுற்றிவந்து சில மர்மங்களுக்கு தீர்வளித்துள்ளனர்.
சிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக்கொண்டனர். இப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சர்யங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் சில சிலைகள் உடைந்தும் போனது. 
ஒருவழியாய் 18 ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஒரு புதிருக்கு அறிவியல்பூர்மான பதில் 21ம் நூற்றாண்டில் கிடைத்தது.

#அமானுஷ்ய_அனுபவம் 
#மோய்
#ஈஸ்டர் தீவு






No comments:

Post a Comment

காளிதேவி தரிசனம்

அமானுஷ்ய அனுபவம்-16 காளிதேவி தரிசனம் : Disclaimer : இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் தான், எனக்கும் இதுல அனுபவம்லா இல்லை, பிருங...