1896 ம் ஆண்டு இங்கிலாந்தின் தூதராய் பாரிஸில் பணியாற்றிய ஆங்கிலேயர் ஹாமில்டன் பிளாக்வுட், மிகஉயர்ந்த பொறுப்பில் பதவியேற்குமுன் ஓய்வுக்காக சில காலம் அயர்லாந்து சென்றார். அங்கு ஆபேலி எனும் நகரில் பெரிய ஆடம்பரமாளிகையில் தங்கியிருந்தார்.ஓய்வுநாட்கள் அங்கு நல்லமுறையில் கழிந்தது. சிலநாட்கள் கழிந்தது. இரவில் அறையின் வெளிப்புறம் சில வினோதங்களை உணர்ந்தார். திடீரென விபரீத சப்தங்கள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்து விழித்துப் பார்க்கையில் அறையின் அருகே அழுகைக் குரல் கேட்டது. பெருங்குரலெழுப்பி விம்மி அழுகும் அந்த குரல் யாருடையது என அறையிலிருந்து வெளியே வந்து காண எண்ணினார். அறையை விட்டு வெளியே வந்ததும், என்னதென அடையாளம் காண இயலா ஒரு மர்மக்குரல் இம்சித்தது. அந்த நள்ளிரவில் மனதில் துணிவை வரவைத்து அந்த குரலின் திசையை நோக்கி நடந்தார். முந்தையநாள் பகலில் அங்கு தான் கண்ட தோட்டமும், சோலைவனமும் மறைந்து ஒருவித கரடுமுரடான புதராய் காட்சியளித்தது. அந்த புதரை விலக்கி பார்த்தால் அங்கு பழங்கால சிலுவைகள் நிறைந்த கல்லறைகள் நிறைய காட்சியளித்தது. துணிச்சலை வரவழைத்து உள்ளே நுழைந்தார் பிளாக்வுட். அங்கே ஒரு கல்லறையின் அருகேயுள்ள மரத்தில் ஓர் நிழலாடியது. யார்நீங்கள் என கத்தியபடி முன்னேறினார். அங்கே "அதை" பார்த்தேவிட்டார். தோளில் கல்லறைப்பெட்டி ஒன்றை சுமந்து குனிந்தவாறு ஓர் உருவம் நடந்து சென்றது. நில்லடா, என குரலை உயர்த்தினார் ப்ளாக்வுட், தன் தோளில் இருந்த சுமையை கீழேவைத்துவிட்டு திரும்பியது அந்த உருவம். மிருகத்தனமான கொடூரமான வெளிறிய முகத்துடன் பளிச்சென்ற கண்களால் பிளாக்வுட்டை பார்த்தது அவ்வுருவம். அதன் கொடூரமுகத்தை கண்ட பிளாக்வுட் பின்வாங்கினார். தன் இடதுகைவிரலை உயர்த்தி பின்தொடராதே! என்பதுபோல் எச்ரித்துவிட்டு மறைந்தது அவ்வுருவம். அலறியபடி அறைக்கு ஓடினார் பிளாக்வுட். மறுநாள் காலை மீண்டும் அங்கே வந்தால் வழக்கம்போல் அங்கு சோலைகளும், தோட்டமும் இருந்தது கல்லறையை காணவில்லை.
அதன்பின் ஒருவருடம் கழிந்தது. அரசாங்க உயர்பதவியேற்று பிரான்ஸ்நாட்டு தூதுராக பதவியேற்றார். பிரான்ஸ் அரசாங்கம் பிளாக்வுட்டை கவுரவப்படுத்த அங்குள்ள பிரபல கிராண்ட் ஹோட்டலில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. மிகவும் மகிழ்வுடன் விருந்து நடந்தது! அதன்பின் தன் உதவியாளர்களுடன் விருந்தினைமுடித்து விட்டுக்கு செல்ல லிப்ட்டை நோக்கி சென்றார். அனைவரும் மரியாதை நிமித்தமாய் வழிவிட்டனர். அப்போதுதான் லிப்டை கவனித்தார். லிப்டிற்குள் ஆப்ரேட்டராய் ஒருவன் அமர்ந்திருந்தான். ஒருகணம் ஆடித்தான் போனார் பிளாக்வுட் அயர்லாந்தில் தான் கண்ட மர்மமனிதன் தன் எதிரே அமர்ந்திருந்தான். அதே கொடூரமுகம், அதே நிலைகுத்திய வாழிகள்! பாளாக்வுட்டை பார்த்து மெல்ல கொடூரசிரிப்பு சிரித்து தலையசைத்தது. பதட்டத்தில் அவர் லிப்டில் ஏறவால்லை. மற்ற உதவியாளர்கள் அனைவரும் ஏறினர். லிப்ட் கதவு தானாக மூடியது. கதவுமூடும் கடைசி இடவெளியில் அந்தகண்கள் பிளாக்வுட்டை பார்த்தது. உடனே லிப்ட் மேலே சென்றது.
ரிஷப்ஷனுக்கு நடந்தே வந்தார் பிளாக்வுட் அவர் வந்துசேரவும் மிகப்பெரும் சப்தத்துடன் லிப்ட் அறுந்து கீழே விழுந்தது. லிப்டில் இருந்த அனைவருக்கும் மாண்டனர். குறிப்பாக அந்த உருவத்தை காண ஓடினார் பிளாக்வுட், ஆனால் அந்த முகம் முற்றிலும் சிதைந்து கிடந்தது.
அன்றைய பிரான்ஸ் மட்டுமல்லாது உலகின் பலநாளிதழ்கள் இச்செய்தியை பிளாக்வுட்டின் பேட்டியுடன் வெளியிட்டன. அன்று பலரை கலங்கச்செய்த அமானுஷ்ய சம்பவம் இது.
#அமானுஷ்யஅனுபவங்கள்
#பிளாக்வுட்


No comments:
Post a Comment