Saturday, 27 June 2020

கரும்புலியின் ஆவி

தினம் ஒரு அமானுஷ்யம்-10

கரும்புலியின் ஆவி:

மே 21 1991 அன்று சரியாக 22:21 மணிக்கு தானு, ராஜீவ்காந்தியை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த  வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ்காந்தி மற்றும் 14 பேரும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் நேரடியாக சம்பந்தபட்ட தணு ராஜீவ்காந்தியுடன் உடல் சிதறிப் பலியாகினார். இந்த கொலை தொடர்பாக சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் , முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகின்றனர்.
அதன்பிறகு ஒருமுறை பிரியங்காந்தி-நளினி சந்திப்பு நடந்தது. அப்போது நளினி கூறிய தகவலை வழக்கறிஞர் ஏகலைவன் குறிப்பெடுத்துக்கொண்டார். அதை நளியின் குரலாய் தற்போது பார்ப்போம்.

மே21 சுபா,தனுவுடன் பாரீஸ் கார்னர் பேருந்துநிலையம் போய் ஏறினோம். 7 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் சென்றடைந்தோம். சிவராசனுக்கு அங்கிருந்த நிறைய விஐபிகள் பரிட்சயமாய் இருந்தனர். விஐபி வரிசையில் தனுவை அமர வைத்தார். அதன்பின் தொலைவில் சென்று அங்கிருந்த விஐபிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின் சுபா என் கையைபிடித்து தொலைவாக அழைத்துச் சென்றார். ஏன்?என நான் கேட்க,பதிலளிக்காமல் என்னை வெளியே இழுத்துச் சென்றார். சாலையை நோக்கி நாங்கள் நகருகையில், இதுவரை நான் கேட்டிராத மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது.  அந்த இடமே புகையாய் காட்சியளித்தது.

அதன் பின் விறுவிறுவென சிவராசன் எங்களை ஒரு புதுவீட்டிற்கு அழைத்துச் செல்வதாய் ஆட்டோவில் அழைத்துச் சென்றார். நாங்கள் மூவரும் ஆட்டோவில் இறங்கி நிற்கையில் எங்கள் எதிரே "தணு" நடந்து சென்றார். இது கற்பனையல்ல நாங்கள் அனைவரும் அதை பார்த்தோம். இது எப்படி சாத்தியம் என சுபாவை நான் பார்க்க! அவர் வாய்மேல் கைவைத்து அமைதியாய் தனுவை கவனிக்க சொன்னார். வீட்டிலிருந்து எவ்வாறு தணு கிளம்பினாரோ! அதே உடையில் கையில் சந்தனமாலையுடன் நடந்து சென்றார். பிறகு சிபிஐ எங்களை கைதுசெய்து தனித்தனியே எங்களை கைதுசெய்து உண்மையறியும் சோதனை செய்தும் மூவரும் அதையே கூறினோம் என பின்னாளில் எங்களுக்கு தெரிந்தது! 
இன்றுவரை இது கற்பனையா! பிரம்மையா அல்லது ஆவியா!  என தெரியவில்லை.

No comments:

Post a Comment

காளிதேவி தரிசனம்

அமானுஷ்ய அனுபவம்-16 காளிதேவி தரிசனம் : Disclaimer : இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் தான், எனக்கும் இதுல அனுபவம்லா இல்லை, பிருங...