ஓய்ஜா போர்டு(Ouija board):
பலகை என்பது ஒரு காகிதம், அட்டை, அல்லது மரம் போன்ற ஏதாவது ஒன்றில் ஓய்ஜா போர்டு அமைக்கப்படுகிறது! அதில், நான்கு புறங்களிலும் சுற்றியோ அல்லது அரைவட்ட வடிவிலோ ஆங்கில எழுத்துக்கள் இருபத்தியாறும், கணித எண்களும் எழுதப்பட்டிருக்கும். இருவர் அப்பலகையின் எதிரெதிரே அமர்ந்திருப்பர். பலகையின் நடுவில் ஒரு வட்டமிடப்பட்டு அதில் ஏதாவது வட்ட நாணயம் ஒன்று வைக்கப்படும். இருவரும் அந்த நாணயத்தைத் தங்கள் சுட்டுவிரலால் ஓரளவு அழுத்தித் (ஆனால் மிகவும் அழுத்தாமல்) தொட்டுக்கொள்வர்.
ஒருவர் தங்கள் மனதிலுள்ள வினாவை எழுப்புவார். பிறகு ஆவியை அழைக்கவென்று சில மந்திரங்கள் போன்று ஏதேதோ சொல்லிவிட்டு, பின்னர் அந்தக் கேள்வியை யாராவது ஒருவர் கேட்பார். அவ்வாறு கேள்வி கேட்கப்பட்ட சில நொடிகளில் அந்த நாணயம் அந்தக் கேள்விக்கான பதிலைக் கொண்ட எழுத்துக்களை நோக்கி நகரும். இதன் பொருள் - நாணயத்தைச் சரியான பதிலுக்கான எழுத்துக்களை நோக்கி நகர்த்துவதன் மூலம் ஆவி தன் பதிலைத் தெரிவிக்கிறது.
இது கி.பி 1100 காலகட்டங்களில் முதன்முதலில் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விளையாடும் விதிமுறைள்:
1.வெறும் விளையாட்டாக எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் முயற்சித்தால் மட்டுமே உங்களால் ஆத்மாக்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
2.மொட்டை மாடியிலோ அல்லது திறந்த நிலப்பரப்பு உள்ள இடங்களிலோ கண்டிப்பாக இதை பயன்படுத்தகூடாது.
3.முதலில் நீங்கள் எந்த அறையில் பயன்படுத்த போகிறீர்களோ அந்த அறையை சுத்தமாக வைக்கவும். துடைப்பம் , செருப்பு ஆகியவை அந்த அறையில் இருக்க கூடாது. சாமி சிலைகளோ, படங்களோ இறைதொடர்பானவை இருந்தால் அவற்றையும் நீக்கவும்.
அதேபோல் கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை துணியால் மூடிவிடவும்.. கண்ணாடிகள் ஆவி உலகிற்கும் நம் உலகிற்கும் பாலமாக நம்பப்படுகிறது எனவே கண்ணாடிகளை கண்டிப்பாக மூடி வைக்கவும்.
3.நீங்கள் தனியாகவே இதை பயன்படுத்தலாம்.. இருந்தாலும் ஒரு நண்பருடன் நீங்கள் இதை பயன்படுத்துவது நல்லது .
4.இரவு நேரமே இதை பயன்படுத்த உகந்த நேரம். உங்கள் அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவா்த்தி வெளிச்சதை மட்டும் பயன்படுத்தவும் , அறையில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் பார்த்துகொள்வது மிக முக்கியம்.
5.தரையில் அமர்ந்து உபயோகிப்பதே சிறந்தது. முதலில் ஒரு நாணயத்தை போர்டின் மீது வைத்து அதன் மீது உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும் . இதை உபயோகிக்கும் பொழுது அருகில் உங்கள் நண்பா்கள் இருந்தால் அவர்களும் அந்த நாணயத்தின் மீது விரலை வைக்க வேண்டும். முதலில் மூன்று முறை நாணயத்தை சுற்றவும். சுற்றியபின் " இங்கே யாரவது இருகிறீர்களா? " என்று கேட்கவும் .
இதுதான் முதல் அடி நீங்கள் அவற்றுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் .
4.சில நேரம் நாணயம் நகராது. ஒரு வேலை அந்த அறையில் ஆத்மாக்கள் இல்லாமல் இருக்கலாம், இல்லையென்றால் இருந்தும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . "Yes ", "S" என்ற எழுத்தை நோக்கி நாணயம் நகர்ந்தால் ஆத்மா அந்த அறையில் இருக்கிறது என்றும் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள தயார் என்றும் அர்த்தம் ..
5.உங்கள் முதல் கேள்வி "நீங்க MOONல் இருந்து வரீங்களா? இல்லை SUNல் இருந்து வரீங்களா? ", என்று கேட்கவும். நாணயமானது மூன் படம் பக்கமோ அல்லது மூன் என்ற எழுத்துக்களையோ நெருங்கினால் அந்த ஆத்மா பொய்களை அதிகமாக கூறக்கூடியது, தீய ஆத்மா என்று அர்த்தம், Sunஎன்றால் அது உண்மையை பேசும் நல்ல ஆத்மாவாகும்.
6.அவற்றிடம் வழக்கமான கேள்விகளை நீங்கள் கேட்கலாம் . முக்கியமாக அவற்றிடம் பேசும் பொழுது சிரிக்கவோ, இல்லை பயமோ கூடாது. உங்களது சில்லறை தனமான கேள்விகள் அவற்றை எரிச்சல் அடைய செய்யலாம்.
7.பெயர், எப்போது இறந்தீர்கள்? உங்களுடன் வேறு ஆன்மா உள்ளதா? என Formality questions கேட்கலாம்!
8.உங்கள் கேள்விகளுக்கு நாணயம் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து பதில் சொல்லும் . அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் சுலபமாக புரிந்துகொள்ளலாம் .
9.நாணயம் Z-A அல்லது 9-0 என்று வரிசையாக நகர்ந்தால் அவை தொடர்பை முடித்துக்கொள்ள முயல்கிறது என்று அர்த்தம், அந்த நிலையில் நீங்கள் "Goodbye" என்று சொல்லி முடித்துக்கொள்ளவும்.
நாணயம் Goodbye ல் நகர்ந்தபிறகே நீங்கள் நாணயத்தில் இருந்து விரலை எடுக்கவேண்டும். அதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் நீங்கள் விரலை நாணயத்தில் இருந்து எடுக்க கூடாது.
மேலும் கேட்கும் கேள்விகளுக்கு "Z" அல்லது "O" வில் மாறி மாறி குதித்தால் அது Zozo எனும் துர்ஆத்மா ஆகும். இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.
இந்த போர்டு Online ல் கிடைக்கிறது! 😱😱😱 விளையாடுவோமா! ‘பேய்களில் நம்பிக்கை இல்லை, ஆனால் பயமாக இருக்கிறது’ என்று புதுமைப்பித்தன் கூறுவார். நம்பிக்கை வேறு பயம் வேறு.
நமக்கு இது இரண்டுமே உண்டு😱😱😱


No comments:
Post a Comment